இடுகைகள்

வீக்கம் தீர

 1.வீக்கம் தீர: ஓமம், மிளகு, கடுகு, சுக்கு, திப்பிலி, கழச்சப் பருப்பு, இந்துப்பு, பூண்டு, இவையாவும் வகைக்கு 1/2 பலம், அடுத்து  கருவேப்பிலை, அறுகு, வசம்பு, கணாம்புல் வேர், முக்காளை வேர், சாபட்ரனை வேர், கடுக்காய், தான்றிக்காய், புங்கம் வேர், இவை எல்லாம் சேர்த்து கசாயம் செய்து அதனுடன் சுக்கை சுட்டு வெட்டி போட்டு அதனுடன் வசம்பை தீயில் கருக்கி போடவும். இதில் ஒரு படி தண்ணீர் விட்டு வற்ற காய்ச்சி கொடுக்க வீக்கம் தீரும்... 2. வீக்கம் தீர மேல் பூச்சு: நஞ்சுண்டாம் வேர், யீசுரி வேர், வட்ட கிலுகிலுப்பை வேர், வெள்ளாட்டு மூத்திரத்தில் அரைத்து கொதிக்க வைத்து பொறுக்கும் சூட்டில் வீக்கம் உள்ள இடத்தில் தடவ வீக்கம் தீரும்...

கொரானா போன்ற கொடிய நோய்களை எதிர்க்கும் சூரணம்

                    கொரானாவை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட  சூரணம் 1.கடுக்காய் 2.தானிக்காய் 3.நெல்லிவற்றல் 4.மஞ்சள் 5.மரமஞ்சள் 6.கண்டங்கத்திரி 7.கிச்சிலிக்கிழங்கு 8.சுக்கு 9.மிளகு 10.திப்பிலி 11.மோடி 12.பெருங்குரும்பை 13.பூனைக்காஞ்சோறு 14.கடுகுரோகணி 15.பற்பாடகம் 16.முத்தக்காசு 17.புங்கம்வேர் 18.வேப்பன்வேர்பட்டை 19.தாமரைக்கிழங்கு 20.அதிமதுரம் 21.வெள்ளைவெட்பாலை அரிசி 22.சிறுதேக்கு 23.ஓமம் 24.கரும்வெட்பாலையரிசி 25.முருங்கை விதை 26.காவிக்கல் 27.வசம்பு 28.இலவங்கப்பட்டை 29.தாமரைக்கொடி 30.கொத்துகடும்பை 31.வாய்விளங்கம் 32.சித்திரமூலம் 33.தேவதாரி 34.சவ்வியம் 35.கொடிமுந்திரிப்பழம் 36.பேய்ப்பொடலை 37.ஆடாதோடை 38.தண்ணீர்விட்டான்கிழங்கு 39.இலவங்கம் 40.வெள்ளைத்தாமரை 41.தேள்கொடுக்குசெடிசமூலம் 42.இலவங்கப்பத்திரி 43.ஜாபத்திரி 44.தாளிசப்பத்திரி இந்த மூலிகைகள்யாவும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், இவைகளை சம அளவில் வாங்கி வந்து பொடியாக்கி இதற்கு சமன் எடையில் பாதியளவு எடையில் நிலவேம்பு சூரணம் கலந்து வைத்து கொண்டு பத்திரபடுத்திக்கொண்டு ஒரு டம்ளர் நீரில் ஒரு...

கீரைகளின் பயன்கள்

அகத்திக்கீரை பயன்கள் :    அகத்திக்கீரையை பழுப்பு நீக்கி சமைத்து சாப்பிட்டு வர பித்தம் தணியும்,மலச்சிக்கல் தீரும்... முருங்கை கீரை பயன்கள் :     முருங்கைக்கீரையை காம்பு,பழுப்பு நீக்கி சமைத்து சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்... முருங்கை காய் சமைத்து சாப்பிட்டு வர விந்து அணுக்கள் அதிகரிக்கும்.. . பருப்பு கீரை பயன்கள் :   பருப்புக்கீரையை சமைத்து சாப்பிட பித்தம் தணியும்... வெள்ளை கீரை பயன்கள் :   வெள்ளை கீரையை சமைத்து சாப்பிட்டு வர தாய்மார்களுக்கு பால் சுரக்கும், உடல் வலிமை அடையும்... பசலை கீரை பயன்கள் :   பசலை கீரையை சமைத்து சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் குணமாகும்... பால்சொரி கீரை பயன்கள் :   பால்சொரி கீரையை சமைத்து சாப்பிட்டு வர பித்தம் குறையும், மயக்கம் தணியும்... முளைக்கீரை பயன்கள் :   முளக்கீரையை சமைத்து சாப்பிட்டு வர நன்றாக பசி எடுக்கும்,காச நோய் குணமாகும்,காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்... முள்ளுக்கீரை பயன்கள் :   முள்ளுக்கீரையை சமைத்து சாப்பிட்டு வர மந்தம்,நீர்க்கட்டு குணமாகும்... அரைக்கீரை பயன்கள் : ...

நெல்லிவற்றல்

படம்
தேவையான பொருட்கள் :  நெல்லிவற்றல், திப்பிலி, சித்திரமூலம், கடுக்காய், இந்துப்பு செய்முறை :  இவைகளை  சம அளவாய் எடுத்து சூரணம் செய்து மூன்று விரலால் எடுக்கும் அளவு எடுத்து கசாயம் செய்து உடகொண்டால் அனைத்து காய்ச்சல் குணமாகும், பசி நன்றாக  எடுக்கும்...

கப சுரம் மற்றும் அனைத்து சுரங்களுக்கும் சூரணம்

படம்
தேவையான பொருட்கள் :  கண்டுபாரங்கி, முத்தகாசு, பற்பாடகம், பூனைக்காஞ்சொறி, சுக்கு, நிலவேம்பு, கோஷ்டம், திப்பிலி, கண்டங்கத்திரி, சீந்திற்கொடி, ஆடாதொடைஈர்க்கு இவைகளை சம அளவு எடுத்து இடித்து பொடிசெய்து அரை டீஸ்பூன் மூன்று டம்ளர் தண்ணீரில் கரைத்து ஒரு டம்ளராக சுண்ட காய்ச்சி காலை மாலை அருந்த கப சுரம் உள்ளீட்ட அனைத்து சுரமும் குணமாகும்...

நெல்லிக்காயின் பயன்கள்

படம்
கப ரோகம் :  ஒரு கிலோ நாட்டு நெல்லிக்காயை கொட்டை நீக்கி அதற்கு போதுமான அளவு மிளகாய்,உப்பு சேர்த்து உரலில் இடித்து எழுமிச்சை பழம் அளவுகளில் உருண்டை பிடித்து அதை அடையாக தட்டி வெயிலில் காயவைத்து நன்றாக காய்ந்ததும் எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ளவும், தேவையான போது ஒரு நெல்லி அடையை எடுத்து துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட கப ரோகம் (சளி),மலச்சிக்கல்,வாந்தி இவைகள் சாப்பிட குணமாகும்....

கப சுர குடிநீர்

படம்
சித்த மருத்துவத்தில் கொரானா வைரஸ் நோய்க்கு பயன்படுத்தும் கப சுர குடிநீர் தயாரிக்கும் முறைகளில் ஒன்று.... தேவையான பொருட்கள்: 1.திப்பிலி 2.மோடி 3.சவ்வியம் 4.சித்திர மூலம் 5.சுக்கு 6.மிளகு 7.ஏலக்காய் 8.ஓமம் 9.வேட்பாலை அரிசி 10.வட்டத்திருப்பி 11.தக்கோளம் 12.கண்டுபாரங்கி 13.வேப்பன் விதை 14.பெருங்காயம் 15.கடுகு ரோகணி 16.கடுகு 17.வாய்விளங்கம் 18.அதிவிடையம் 19.தர்ப்பை வேர் செய்யும் முறை:  மேற்கண்ட பொருட்கள் யாவும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஒவ்வொரு பொருளும் சம எடையை எடுத்து இடித்து பொடி செய்து கலந்து அரை டீஸ்பூன் தூளை இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு காய்ச்சி ஒரு டம்ளராக சுண்ட காய்ச்சி அருந்த சளி காய்ச்சல் குணமாகும்....